SSLF CITY & HOUSING ADD

Wednesday, June 3, 2015

“RIGHT DECISION IN RIGHT TIME WITH THE LEAD OF RIGHT PERSON IN RIGHT PLATFORM”


திட்டங்கள் – நடவடிக்கைகள்
SSLF CITY & HOUSING: STAR TEAM


BREAD EARNING HOURS

மூன்று மணிக்கு எழுந்து முனிவனாகலாம். நான்கு மணிக்கு எழுந்து ஞானியாகலாம். ஐந்து மணிக்கு எழுந்து அறிஞனாகலாம். ஆறுமணிக்கு எழுந்து மனிதனாகலாம். சாதாரணமாக உள்ளவர்கள் ஆறு மணி, ஏழு மணி என்று துயில் எழுவதில் நமக்கொன்று மில்லை. ஆனால் நாமோ நமது பிற்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு காலத்தில் இதனை அடையவேண்டும் என்ற திட்டங்களை மனதில் கொண்டுள்ளோம். 

நாம், நமது கனவினை நனவாக்க வேண்டுமானால், சிறிதளவாவது தியாகம் செய்ய வேண்டும். எதனை? எப்படி? சிந்தித்தால் தெளிவு பிறக்கும். நமது இலக்கு எட்டாதத் தொலைவில் இருந்தாலும், நமது மனக் கண்ணின் முன்பு நிறுத்தி வைத்தால் இந்த தியாகம் ஒரு பொருட்டாகவே தெரியாது. காலை கண் விழிப்பது முதலில் ஒருமணி நேரம் முன்னோக்கி செல்லவேண்டும். அவ்வளவே. நாம் முன்னேற இதனைச் செய்வதில் தடை ஏதும் இருக்காது என்றே எண்ணுகின்றேன்.

இதனால் என்ன கிடைக்கும். வண்டியில் பூட்டப்பட்ட, கண்களுக்குப் பட்டையிடப்பட்ட குதிரை செல்வதைப் போலவோ, வைக்கோல் பொதியினை ஏற்றி செல்லும் காளைகள் போலவோ நாம் இருந்து அன்றாடம் செய்வதையே செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த செயலை மாற்ற, நம் வாழ்வில் மாற்றத்தினை கொண்டு வர எடுக்கும் முதல் பயிற்சியே இது. இந்தபயிற்சி நம்மை ஒரு ரேஸ் குதிரையாகவோ, ஜல்லிக்கட்டு காளையாகவோ மாற்றி விடுவதை நாளடைவில் நாம் காணமுடியும்.

தினமும் ஒரு மணிநேரம், ஆரம்பத்தில் கூட்டும் பொழுது, நமது செயல்பாடுகளை குறித்து சிந்தித்தலும், திட்டமிடலும் நமக்கு சந்தர்ப்ப சூழல் அமைகின்றது. சாதாரணமாக சாதிக்க வேண்டும் என்று எண்ணினால், நமது வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று எண்ணினால், தினமும் 1 1/2 மணிநேரம் செயல்படும் நேரத்தினைக் கூட்ட வேண்டும். அதாவது, 6 மணிக்கு பதிலாக 4 1/2 மணிக்கு எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

இதனால் ஒரு வாரத்திற்கு 7 x1-1/2 மணிநேரம் = 10-1/2 மணி நேரம் கூடுதலாக உருவாக்கி உள்ளோம். ஒரு வருடத்தில் 52 வாரங்களுக்கு மொத்தமாக சுமார் 546 மணி நேரம் – கூடுதலாக - உழைக்க / வருமானம் தேட, வாய்ப்பு கிடைக்கின்றது. இது சுமார் 68 வேலை நாட்களாகும். இரண்டு மாதங்களை ஒருவருடத்தில் கூட்டிவிட்டோம். இதுவே கூடுதலாக வருமானத்தினை கொண்டு வருகின்ற BREAD EARNING HOURSஎன்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனித வேலை நாட்கள்.

PERFECT PLANNING TO ACHIEVE GOAL


நமது கனவின் அடிப்படையில், நமது தேவைகளை மூன்றாகப் பிரித்து –  1) உடனடித் தேவைகள், 2) குறுகிய காலத்தேவைகள், 3) நீண்டகால கனவுக்கான தேவைகள் என – திட்டமிட்டுக் கொண்டு அதனை குறிப்பேட்டில் குறித்து வைத்தல். தேவைகளை மட்டும் குறிக்காமல் அதற்கு தேவையான பணம் எவ்வளவு, எந்த காலத்திற்குள் அது செய்து முடிக்க வேண்டும் என்றும் குறித்துக் கொள்ளுதல் மிக முக்கியமாகும்.

இந்த மூன்று பிரிவுகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எப்படி? 
எண். (1) 50%, எண். 2) 30%, எண்.3) 20% என நமது வருவாயைப் பிரித்து அந்தந்த செலவினங்களுக்கு உரியவைகளை முறைப்படி, தவறாமல் செய்து, அதனையும் குறிப்பேட்டில் எழுதி வைக்க வேண்டும். இந்த குறிப்பேடுதான் உங்களுக்கு, உங்களின் திட்டங்கள் சரிவர நிறைவேற உதவும் ஊன்று கோல்.

இதனால் நாம் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும், முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், விடுபட்டுப் போனவைகளை கண்டு திருத்தம் செய்யவும் நமக்கு உதவுகின்றது. மேலும், நமது குறிக்கோளை அல்லது கனவினை எவ்வளவு தூரம் நெருங்கியுள்ளோம் என்பதனையும் துல்லியமாக நமக்கு காட்டும் ஒரு பாகை மானியாக விளங்கும்.


RIGHT DECISION, RIGHT PLATFORM & RIGHT PERSON: பகுதி-1

எந்த தீர்மானம் எடுத்தாலும், ஆழ்ந்து ஆராய்ந்து, சாதனை புரிந்தவர்களின் ஆலோசனைகளை கண்டு, கேட்டு மனதில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும். ஒரு முடிவு எடுப்பதில் அதிகம் தாமதம் செய்வது கூடாது. ஓரிருமுறை ஆலோசிக்க, ஆலோசனை களைப் பெற நேரம் எடுத்துக் கொள்ளலாமே தவிர, ஒரு தீர்மானம் எடுத்தபின்பு தயக்கமோ, தாமதமோ செய்தல் கூடாது. நடவடிக்கைகளை தாமதப் படுத்துவதால் இழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பின்பு அதனை நினைந்து வருந்துவது பயனற்றது.

நமது தகுதியை நாம் முதலில் அறிய வேண்டும். நமது கனவின் நிலையை அறிய வேண்டும். அதுபோன்ற நிலையை அடைய என்ன செயல்களை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று சிந்தித்து தெளிவடைதல் வேண்டும். அதற்கேற்ற வகையில்  நமது செயல்பாடுகளை,  நடவடிக்கைகளை செயல்படுத்த ஏதுவான இடம் அறிதல் வேண்டும்.

குறிப்பிட்டு கூறினால் நமது பிற்கால வாழ்க்கையில் சொந்தமாக ஒருவீடு, கார், குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்லதொரு குடும்பம் அமைத்துக் கொடுத்தல், அவர்களுக்கு சொந்தவீடு, கார் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவைகள் சாதாரணமாக அனைவரின் கனவுகளாக இருக்கும்.

இவைகளை நிறைவேற்ற காலம் அல்லது கெடு ஒன்றை வைத்துக் கொண்டால், அதற்கு தேவை முக்கியமாக பணம். தற்போது நாம் படித்துக் கொண்டோ, அல்லது நல்லதொரு குடும்ப அமைப்பில் வேலைக்குகச் சென்று  கொண்டிருப்பவராகவோ, அரசு மற்றும் தனியார் துறையில் ஒரு மாத வருவாய் ஈட்டும் நபராகவோ அல்லது ஓய்வு பெற்று வீட்டிலோ இருக்கக்கூடும்.

அனைவருக்கும் மேலே கூறிய கனவுகள் உறுதியாக இருக்கும். என்ன செய்யலாம். நமது கனவு திட்டம் நிறைவேற எவ்வளவு தேவை என்பதனை சுமாராக கணித்து, தற்போதை நிலவரத்தினை மனதில் கொண்டு திட்டமிடல் வேண்டும்.

மேலே கண்ட அனைவரிலும் படிக்கும்போதே திட்டமிடுபவர் அதி புத்திசாலி என்றே கூறவேண்டும். நல்லதொரு குடும்ப அமைப்பில் வேலைக்கு செல்பவராகவோ, அரசு மற்றும் தனியார் துறையில் ஒரு மாத வருவாய் ஈட்டும் நபராகவோ இருப்பவர் திட்டமிடுபவர் புத்திசாலி என்றே கொள்ள வேண்டும். முதியோர் மற்றும் ஓய்வு பெற்ற பென்ஷன் வாங்கினாலும், வாங்கா விட்டாலும், இவர் திட்டமிடுவது, கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்பவராக கருத வேண்டியுள்ளது.

எனவே, மேலே கண்ட கருத்துக்களின்படி திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தல் போன்றவை களை ஒத்திப் போடாமல், குறிப்பிட்ட காலத்தில் செய்து, நமது செயல் திட்டங்களை செயல் படுத்துதல் வேண்டும்.

நமது இலக்கு அல்லது குறிக்கோள் அல்லது கனவு என்னவென்று நமக்குத் தெரியும். அதற்குண்டான காலமும் தெரியும். அதற்கு தேவையான பணம் எவ்வளவு என்றும் தெரியும். பிறகென்ன, சிந்தனைக் குதிரையைத் தட்டி, இந்த காலகட்டத்தில் இவ்வளவு பணம் அல்லது வருமானம் நமக்கு நேர்மையான வழியில் கிடைக்கும் தொழில் எது என்று கூர்ந்து கவனிக்க வேண்டியதுதான்.

RIGHT DECISION, RIGHT PLATFORM &
RIGHT PERSON: பகுதி-2

உலகில் உள்ள மனிதர்களை கூர்ந்தது கவனித்தால் அவர்கள் முக்கியமாக நான்கு பிரிவுகளில் அடங்கி விடுகின்றனர்.

முதல் பிரிவில் உள்ளவர்கள்:

தமது கல்வி, குடும்ப சூழல், நட்பு சூழல் இவைகளின் போக்கில் ஒரு மாத வருமானப் பிரிவினைச் சார்ந்தவர்களாக, அடிமைத்தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். காலை முதல் மாலை அல்லது இரவு வரையிலும் அல்லது ஷிப்ட் முறையிலும் வேலைக்குச் செல்பவர் களாகவே இருக்கின்றனர்.

தங்களின் வருமானத்தினை அன்றாட, மாதாந்திர, வருடாந்திர தேவைகளுக்கு மட்டுமே இவர்களால் ஈடுகட்ட முடிகின்றது. இவர்களுக்கு சேமிப்பு மற்றும் எதிர்கால கனவுகள் எல்லாம் கனவுகளாகவே இருக்கின்றன.

இரண்டாவது பிரிவில் உள்ளவர்கள்:

ஒருவரிடம் கைகட்டி சேவகம் செய்வது பிடிக்காமல், சுதந்திரமாக மாத வருமானத்தை விட கூடுதலாக வருமானம் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன், தம்மிடம் உள்ள குறைந்த சேமிப்பினை மூலதனமாகக் கொண்டு தானே முதலாளி, தானே தொழிலாளி என்ற வகையில் ஒரு குறுந்தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். அதிலும், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து, முதலீடுக்கு சேதாரமில்லாமல் லாபம் கிடைக்கப் போராடுகின்றார்கள்.

போட்டி பொறாமை நிறைந்த இக்காலத்தில் இவர்களால் கூடுதல் லாபம் பெற இயலாது போகின்றது. சில நேரங்களில், செய்த முதலீடும் இழக்கும் சூழலும் உருவாகின்றது. மிகுந்த மன உளைச்சலும், இயலாமையின் காரணமாக தாழ்வு மனப்பான்மையும் இவரை நோயில் தள்ளும் வாய்ப்பும் உருவாகின்றது.

மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள்:

மேலே கண்ட இரண்டு பிரிவினர்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு, தொழில் போட்டிகளுக்கு இடையில், தம்மிடம் உள்ள முதலீட்டுடன், வங்கி போன்ற நிதி நிறுவனங் களிடம் சொற்ப கடன் தொகையினைப் பெற்று, சில வேலையாட்களை மாத சம்பள அடிப்படையில் வைத்து, சிறுதொழிற்சாலை யில் தேர்ந்தெடுக்கும் ஒரு சில பொருட்களை உற்பத்தியும் மற்றும் விற்பனை செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்களும் இரண்டாம் வகையினரைப் போல இல்லாமல், வருமானத்தினை ஒரளவு கூடுதலாகப் பெறுகின்றனர். இருப்பினும், தொழில்போட்டியில் ஜெயிக்க பெரும்பான்மை யினரால் முடிவதில்லை என்பதனை நாம் காண முடிகின்றது.

நான்காவது பிரிவில் உள்ளவர்கள்:

மேலே கண்ட மூன்று பிரிவுகளில் இருந்தும் மிகவும் மாறுபட்டு, ஏனையோரின் – உறவுகள், நட்புக்கள், வங்கிகள், பொதுமக்கள் ஆகியோரிட மிருந்து நிதியினைத் திரட்டி பலதரப்பட்ட பெருந் தொழில்களில் முதலீடுகளை முடக்கி, அத்தொழில் களுக்குத் தேவையான திறமையான ஆட்களை சம்பளம் மற்றும் வாடகைக்கு ஏற்பாடு செய்து, உடன் சந்தையில் அழிக்கக் கூடிய, பல அத்தியாவசிய பொருட்களைத் தயாரித்தும், சந்தைப்படுத்தியும், மீண்டும் மீண்டும் முதலீடுகளைப் பெருக்கி பல்வேறு துறைகளில் முதலீடுகளை முடக்கியும் பல மடங்கு லாபங்களைப் பெற்று சுகபோக வாழ்வு வாழ்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.

உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் விகிதாச்சாரத்தில் பிரித்தால் இந்த நான்காவது பிரிவில் உள்ளவர்களிடம் 60% ம், மூன்றாவது பிரிவில் உள்ளவர்களிடம் 25% ம், இரண்டாவது பிரிவில் உள்ளவர்களிடம் 10%ம், முதலாவது பிரிவினரிடம் 5% மட்டுமே இருக்கின்றது.

உலக சொத்துக்களின் மதிப்போ 60%,, 25%, 10% மற்றும் 5% என்று பிரிக்கப்படுகின்றது. ஆனால் யாரிடம் இப்படியுள்ளது என்று கவனித்தால் உலகில் உள்ள
5% மக்களிடம் 60% செல்வமும்,
10% மக்களிடம் 25% செல்வமும்,
25% மக்களிடம் 10% செல்வமும்,
60% மக்களிடம் வெறும் 5% செல்வமும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்! உண்மைதானா? 
உண்மையே என்று உலக அறிவியல் மற்றும் புள்ளியியல் ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. இது எதனால் சிந்த்தித்தால் தெளிவு பிறக்கின்றது.


RIGHT DECISION, RIGHT PLATFORM &
RIGHT PERSON: பகுதி-3

சேமியுங்கள்! சேமியுங்கள்!! இதென்ன கோஷம்!!!  
வளமாக வாழ வேண்டுமானால் சேமிக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர்.  உண்மையான, நன்மையான கோஷம்தானே இது!  நமது கனவும் - வளமான வாழ்க்கைதானே!!  அப்படியானால் நாமும் சேமிக்க வேண்டுமே!  எதனை? எப்போது? எப்படி?

நாமும் சேமிக்கவேண்டுமே!
எதனை? எப்போது? எப்படி?
சேமிப்புக்கள் எவைகள் ???

1. பணமாகவோ, தங்க நகைகளாகவோ வீட்டில் அல்லது வங்கியில் வைத்திருத்தல்.
2. வங்கி, அஞ்சலகத்தில் சேமிப்பு, நீண்ட கால வைப்பு, தொடர் வைப்புக் கணக்குகள் ஆகியவைகள்.
3. பங்குகளில் முதலீடு செய்தல்.
4. காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தல்.
5. நிறுவனங்களில் முதலீடு செய்தல்.
6. அசையும் அன்றாடம் உபயோகத்திருக்கு உள்ள சொத்துக்களில் முதலீடு செய்தல்.
7. அசையா சொத்துக்களில் முதலீடு செய்தல்.

சேமிப்பு எதற்காக ? கீழ்கண்ட காரணங்களே முன்னிலைப் படுகின்றன.

1. நமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள.
2. கடன் தொல்லையில் இருந்து விடுபட.
3. நமது நீண்ட கால கனவுகளை நிறைவேற்ற!!!
4. பிற்காலத்தில் வளமான வாழ்க்கை அமைத்திட் வேண்டி.
5. நாம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற வேண்டி.
6. நமது பிற்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டி.

இக்காரணங்கள் எப்போது முடிவுக்கு வருகின்றன. அதன் எல்லை எது? நமக்குப் பணம் ஒரு பிரச்சனை இல்லை, நேரம் ஒரு பிரச்சனையில்லை என்று வரும் பொழுது, எல்லா காரணங்களும் முடிவுக்கு வருகின்றன.

பணம் மட்டுமே இவைகளைப் பூர்த்தி செய்து விடுமா? மிகுதியாக பணம் சேமித்தவர்கள், நிம்மதியாக, நலமுடன், வளமுடன் வாழ்கின்றனரா? என் கேள்விக்கென்ன பதில்?

பணம் - அதன் குணம் என்ன? கூடவே கனம் கொண்டுவரும், அதுதான் தலைக்கனம்!! அதனை அடுத்து வருவது, ஆணவம்!! அதனை அடுத்து வசதியாக வாழ வேண்டும் என்று அனைத்து தீய பழக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றது. பணம் நம்மிடம் வந்தவுடன் நம்முடன் சேரும் நபர்கள் ஒட்டுண்ணிகளைப் போன்று, சுயநலம் கொண்ட, ஆமாம் போடும் ஆசாமிகளாகவோ, தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கும் நபர்களாகவோ இருக்க, கூடுதல் வாய்ப்பு உண்டு.

மேலே கண்ட தீய பழக்க வழக்கங்கள் அனைத்தும், வீண் கௌரவம், டாம்பீகம், ஆணவம், தலைகனம் ஆகியவைகளை இவர்கள், நம்மிடம் உருவாக்கி, தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். இதனை மனதில் கொள்ளாமல், நாமும் தான் தோன்றி தனமாக அதனில் மூழ்கி, நமது உடல்நலத்திற்கும், சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திற்கும் கேடு விளைவித்துக்கொள்ள சந்தர்ப்பம் அமைகின்றது.

இக்கால கட்டத்தில் நாம் மிகவும் கவனமாக தீய பழக்க வழக்கங்களைத் தவிர்த்து, நற்குணங்களை உடைய சாதனையாளர்கள் மற்றும் நண்பர்களின் கூட்டமைப்பில் இருந்து கொள்ள வேண்டும். இதற்கு நமது வளையத்தில் உள்ளவர்களின் நடவடிக்கைகளை தீர்க்கமாக, துல்லியமாக  ஆய்ந்தறிதல் மிகவும் முக்கியம். எதிர்மறை எண்ணங்களையும், தீயதுர்  எண்ணங்களையும் நம்முள் ஏற்ற முற்படும் நபர்களின் உறவுகளை உடன், தீர்க்கமாக நீக்க வேண்டும். பல காரணிகள் இருப்பினும் அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு காரணி உண்டு.

அது என்ன? அதுதான் நேரம்- 'TIME'.!!!!

TIME CONCEPT:

அடுத்து நாம் செய்ய வேண்டியது, மிக முக்கியமாக அன்றாடம் செய்ய வேண்டிய, திட்டமிட்ட வேலைகளை ஒத்திப் போடாமல் செய்து முடிப்பது. இதற்கு மிகவும் முக்கியமானது நேரத்தின் அருமையை அறிந்திருத்தல், நேரம் தவறாமை, அதாவது ஆங்கிலத்தில் TIME CONCEPT/ PUNCTUALITY  என்று கூறுவது. இன்றைய காலகட்டத்தில் பெரும் பான்மையானோர் இதுதானே அப்புறம் செய்யலாம் என்று ஒத்தி போட்டுவிட்டு நமது இலக்கினை – குறிக்கோளினை – கனவினை மனதில் கொள்ளாமல், நாம் குறித்து வைத்திருந்த செயல்பாடுகளில் இருந்து மாறிவிடுவர்.

அவ்வாறு செயல்படுவதால், திட்டங்களை சரிவர நிறைவேற்ற முடியாமல், செயல்பாடுகள் அனைத்தும் ஒரு குழப்ப நிலையை அடைகின்றன. இப்படி ஆரம்பித்து சோர்வு, விரக்தி, மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை, உடல் நலக் கோளாறு போன்றவை களில் நம்மை தள்ளி விடுகின்றது. இவைகள் மென் மேலும் நம்மை துயரத்தில் ஆழ்த்தி, நமது கனவு இலக்கினை கனவாகவே ஆக்கி விடுகின்றன.

ஆகவே, செய்வதை திருந்த செய்து, நேரத்தில் செய்து, திட்டமிட்டபடி செய்து. கனவு இலக்கையும், நிகழ் காலத் தேவைகளையும், குறுகிய காலத் தேவை களையும் நிறைவேற்றினால் மன நிம்மதியும், உடல் நலமும், பாதுகாப்பான சூழலும் உருவாகும். நமது செயல்பாடுகள் அனைத்தும் நமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் போற்றப்படும். நண்பர்களுக்கு மத்தியில் எடுத்துக் காட்டாகவும் திகழமுடியும்.  எதிர்காலக் கனவு நம்வசப்படும் !!!

மற்றுமொன்று நல்லொழுக்கம். GOOD CHARACTER. “GOOD HABITS”. POSITIVE THINKING, ATTITUDE, HELPING TENDENCY. நேர்மறை எண்ணங்களும், செயல்களும் மற்றுமொரு காரணியாகின்றது. ACHIEVERS, LEADERS சாதனையாளர்களின் நட்பு மற்றும் தோழமையைத் தேர்ந்தெடுத்தல் மற்றுமொரு காரணியாகின்றது.  இவைகள் நம்முடன் இருந்தால் செல்வமும் இருக்கும், வளமும் இருக்கும், உடல் நலமும் இருக்கும் !!

ஆகவே, சேமிப்பு வழிகளை கண்டு, அவைகள் எதற்கு என்றும் கண்டு, எவைகளைச் சேமிக்க வேண்டும் என்பதனையும் தற்போது கண்டு தெளிவு பெற்றோம். இவைகள் நமது வாழ்க்கையை வளமாக்க உதவுகின்ற காரணிகளில் ஒன்றாகின்றது என்பதனைத் தெள்ளத் தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறிகின்றோம்.

அடுத்து நாம் காணவிருப்பது, எப்போது எல்லாம் சேமிக்க வேண்டும், எப்படியெல்லாம் சேமிக்க வழிகள் உண்டு என்றும் அதன் வழிவகைகளையும் காண்போமே!!


RIGHT DECISION, RIGHT PLATFORM &
 RIGHT PERSON: பகுதி-4

எப்போதெல்லாம் சேமிக்க வேண்டும் அல்லது சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்?

எப்போதெல்லாம் சேமிக்க முடியுமோ, அப்போதெல்லாம் சேமிக்க வேண்டும். இது சாதாரணமாகக் கூறும் கருத்து. இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா என்றால் வரவே வராது என்பதே மறுமொழியாகும். எதனால் என்று கவனியுங்கள். 

நமக்கு ஒரு குறிக்கோளை அல்லது கனவினை மனதில் கொண்டுள்ளோம். மேலும், அது ஈடேற ஒரு கால நிர்ணயமும் செய்துள்ளோம்.

அப்படியிருக்கையில் “எப்போதெல்லாம் என்ற கொள்கைக்கே இடமில்லை நம்மிடம்.  எந்த நிமிடம் இந்த கனவினை அல்லது குறிக்கோளை மனதில் கொண்டோமோ, அந்த கனம் முதல் சேமிப்பினை துவங்க வேண்டும். எப்படியெல்லாம் சேமிக்க முடியும் என்றும் சிந்தித்து, சேமிப்பினை ஒரு நிரந்தர செலவு போன்று கருதி சேமிக்க வேண்டும்.

சேமிப்பு, ஒருவருடைய வாழ்க்கையில் சிறுபிராயத் திலேயே ஆரம்பிக்க குடும்பத் தலைவர், தலைவி இவர்களால் இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி, தற்போது அனைத்து வங்கிகளிலும் சிறு குழந்தைகளின் சேமிப்பு திறனைப் பெருக்கும் விதமாக, மைனர் அக்கவுண்ட் துவங்கவும், குழந்தைகள் தினமும் தங்களின் சேமிப்பினை ஒரு வங்கியில் வழங்கப்படும் PIGGY BANK - உண்டியலில் சேமித்து மாதமொருமுறை வங்கியில் செலுத்தவும் வகைசெய்து கொடுத்துள்ளார்கள்.

ஒரு குழந்தை தன்னிடம் உள்ள விளையாட்டு சாதனங்களைப் போலவே, பாட புத்தகங்களைப் போலவே, இந்த சிறார் சிறு சேமிப்புக் கணக்கில் தங்களுக்குள்ள சேமிப்புத் தொகை கூடி வருவதைக் காணும்பொழுது பணத்தின் மீதே ஒரு அன்பு, பிரியம், காதல் கொண்டு கண்ணும் கருத்துமாக சேமிக்கத் துவங்குகின்றார்கள்.

இவ்விதம் வளரும் பிள்ளைகள் சேமிப்பின் உன்னத முக்கியத்துவத்தை விளையாட்டாக உணரத் துவங்கி, அவர்கள் வேலைக்குச் செல்லும் காலத்திலும், தொடர்ந்து, திருமண கால கட்டம் கடந்து பின்னர் பெற்றோர்களாக உருவாகி தங்களின் இந்த சேமிப்புப் பழக்கத்தினை தங்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க செய்வர் என்பது திண்ணம்.

நீண்ட கால வைப்புக்கள் முதல் சம்பளம் வாங்கும் பொழுதில், திருமணம் நடைபெறும் தினத்தில், முதல் குழந்தை பிறக்கும் பொழுது, அதன் முதல் பிறந்த நாள், மற்றும் ஏனைய குழந்தைகளுக்கும் இதே போன்று, குறிப்பிட்ட பண்டிகை காலத்தில், உபரியாக போனஸ் போன்று நிரந்தர வருமான கணக்கில் வரும் பொழுது, அல்லது 2- வது வருமானம் வரத்துவங்கும் பொழுதில் இருந்து ... இப்படியாக சில கால கட்டங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மிக விரைவில் நமது தேவைகளுக்கான நிதியினை நிச்சயமாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

சேமிப்பினை “எப்போதெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று கண்ட நாம் அடுத்து காணவிருப்பது “ எப்படியெல்லாம்சேமிப்பினைச் செயல்படுத்தலாம் என்பதே !!!!


RIGHT DECISION, RIGHT PLATFORM &
RIGHT PERSON: பகுதி-5

நாம் தற்போது நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் ஏதாவது ஒரு வேலையில் இருக்கக் கூடும். அல்லது ஏதாவது ஒரு தொழில் செய்து கொண்டிருக்ககூடும். அதில் கிடைக்கின்ற வருமானம் தேவைகளுக்குப் போதவில்லை, அல்லது நமது குறிக்கோளை அடைய போதுமானதாக இல்லை என்பதாலேயே, 2 வதாக உபரி வருமானம் வேண்டி, நேரத்தினைச் சேமித்து, அதற்கான முயற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளோம். சேமிப்பு என்பது வருமானம் கூடினால் மட்டுமே நடக்கக்கூடிய செயல்பாடாகும்.. நாம் முன்னரே கண்ட வண்ணம், BREAD EARNING HOURS கூட்டி, வருமானத்தினைக் கூட்ட வேண்டும் என்று கண்டோம். அதன்படி கிடைக்கும் உபரி வருமானத்தினை எப்போதெல்லாம் சேமிக்கலாம் என்றும் கண்டோம்.

நமது கனவு அல்லது குறிக்கோளையும் அதனை அடைய கால நிர்ணயமும் செய்து கொண்டோம். அதன் மூலம் நமக்குத் தேவையான நிதி அல்லது பணம் எவ்வளவு என்று தோராயமாக நிர்ணயம் செய்து கொண்டோம். ஆயினும் BREAD EARNING HOURS கூட்டி, வருமானத்தினைக் கூட்ட வேண்டும் என்பதனை எப்படித் திட்டமிடுகின்றோம் என்பதனை குறித்த தெளிவு இல்லையேல் இவைகள் எதுவுமே சாத்தியமில்லை.

நமது வருமானம் கூடவேண்டும். நம்மிடம் இருப்பது தற்போதுள்ள  ஒரே வருமானம் தற்போதுள்ள வேலையில் கிடைப்பது மட்டுமே. அது நமது தேவையைப் பூர்த்தி செய்ய போதவில்லையே. ஆகவே, இரண்டாவதாக மற்றும் ஒரு உபரி வருமானம் தேட வேண்டி உள்ளது. நமக்குள்ள தற்போதைய வேலையை விடவும் முடியாது. எதற்கு விஷப் பரீட்சை என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு வாழ்க்கையைக் விதியே என்று கடத்திக் கொண்டிருக்கின்றோம்.

நம்மிடம் இருப்பதோ, உபரியாகக் கொண்ட BREAD EARNING HOURS என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனிதவேலை நாட்கள் மட்டுமே!!  இதனைக் கொண்டு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்தோமானால் இந்த உபரி நேரத்தினை எந்த வகையில் முதலீடாக வைத்து, நாம் இரண்டாவதாக ஒரு வருமானத்தினை பெறலாம் என்பதற்கு வழி பிறக்கின்றது.

வருகின்ற வருமானம் விகிதாச்சார அடிப்படையில் திட்டமிட்டுப் பிரிக்கப் படுகின்றது. அவைகளை அடிப்படையாகக் கொண்டு, நீண்டகால தேவைகள், கனவுகள் அல்லது குறிக்கோள்கள் ஆகியவைகளுக்குத் தேவையான நிதியினை கண்டிப்பாக மாற்று வழிகளில் செலவிடாமல் நீண்ட கால வைப்பு போன்ற முதலீடுகளில் இருத்திவைக்க வேண்டும்.

குறுகிய காலத்தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை, குறுகிய கால வைப்பு, தொடர் வைப்பு, அஞ்சலக கடன் பத்திரங்கள் போன்றவைகளில் முதலீடுகள் செய்துவிட வேண்டும். மேலும் வருகின்ற வருமானம் வங்கிக் கணக்கில் வரவுவைத்து அத்தியாவசிய செலவுகளுக்குத் திட்டமிட்டபடி செலவு செய்து குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

மேலும், நமது குறிக்கோளினை அடைய தேவையான நிதியினை நாம் முன்னமே கண்டறிந்தமையினால், திட்டமிடலும் எளிதாகின்றது. பாதுகாப்புக் கூடிய மன நிம்மதியுடன், நமது நிரந்தர வருமானம் வரும் வழியாக எண் 1 –ஐ எளிதாகக் கையாள முடிகின்றது. நாம் முன்னர் கண்ட வண்ணம் தினமும் கூடுதலாக வருமானம் சேர்க்க நேரத்தினை சேமித்துள்ளோம். அவ்வாறு சேமித்த நேரத்தினை உபரி வருமானம் எண்.2 க்கு பயன்படுத்தி கூடுதல் வருமானம் வரும் வழியைத் தேடவேண்டும்.


RIGHT DECISION, RIGHT PLATFORM &
RIGHT PERSON: பகுதி-6

முன்னர் நாம் விளக்கமாக கண்டவண்ணம் உலகில் உள்ள 60% செல்வம் – உலக ஜனத் தொகையில் 5% மக்களிடம் உள்ளது. அவர்கள் எந்த வழிகளைப் பின்பற்றினார்கள், எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்து இவ்வளவு நிதியினைப் பெற்று முன்னணிக்கு வந்துள்ளார்கள் என்பதனை, சிந்தித்து, தெளிந்து, அதன் வழிகளில் நாம் செல்ல நல்ல ஒரு வழிகாட்டியாக, அல்லது நல்ல ஒரு நிறுவனமாக, அல்லது நல்ல ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்க வேண்டும்.     

தொழில் என்று வரும்பொழுது, முதலீடு முதலிடம் பெறுகின்றது. முதலீடு செய்து முதலாளி என்ற பட்டத்துடன் ஒரு தொழிலை துவங்க அதனைப் பற்றிய அறிவும், ஆர்வமும், திறமையும் வேண்டும். இவ்வாறு நாம் துவங்கும் தொழிலில் லாபம் மட்டுமே வரும் என்று நினைத்தால் அதைவிட மடமை வேறொன்றுமில்லை. எந்த தொழிலானாலும் லாபமும், நட்டமும் உண்டு என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலீடு வைத்து பெரும் அளவில் தொழில் அல்லது நிறுவனம் அமைக்க அதனை நிர்வகிக்க நம்மால் முடியுமா? முடியாதா? தனியே ஒரு நபரால் ஆரம்பிக்கப் படுவது ப்ரோப்ரைட்டர் நிறுவனம் இதில் நாமே ராஜா, நாமே மந்திரி, தீர்மானம் எடுப்பது நாம்தானே? லாபமும் வரலாம், நட்டமும் வரலாம். லாபமென்றால் சரி. நட்டம் வந்தால் தாங்கமுடியாதே?

அடுத்துள்ளது இரண்டு நபரோ அல்லது கூடுதல் நபர்களோ சேர்ந்து அமைக்கும் கூட்டு நிறுவனம். இதில் நாம் முடிவெடுக்க இயலாது. அனைவரும் ஒருமனதோடு எடுக்கும் முடிவே இறுதியாகும். லாபமும் நட்டமும் விகிதாச்சாரத்தில் பிரிக்கப் படும். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைவருக்கும் தேவைப்படும் பொருளாகவும், வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு வாங்கக் கூடிய வகையில் உள்ள பொருளாகவும் இருந்தால் உற்பத்தி கூடும், விற்பனை கூடும், லாபமும் கூடும்.

எந்த ஒரு பொருளும் வாடிக்கையாளர் வேண்டாம், ஏற்கனவே என்னிடம் உள்ளது, ஒன்றிருக்கும் பொழுது இன்னொன்று வேண்டாம் என்று கூறாத பொருள் எது? எந்த ஒரு எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருளும், போக்குவரத்துக்கான கார், இருசக்கர மோட்டார் சைக்கிள் போன்றவைகளுக்கும் இவைகளுக்கு விதி விலக்கல்ல. இவைகளைத் தயாரித்து பலத்த போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் சந்தைப் படுத்துதல் ஒரு இமாலயப் பிரச்சனை. ஆகவே ஒரு தொழிலைத் தனியாக அல்லது கூட்டாகவோ துவங்க தேவைப்படும் முதலீடு நம்மிடத்தில் இருந்தால், தொழிலை ஆரம்பிக்கலாம். ஆயினும் லாபமும் நட்டமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது நமது வருமானம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு 50%, 30% மற்றும் 20% என்று விகிதாச்சாரத்தில் தேவைகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

இவ்விதம் நீண்டகால கனவு திட்டத்திற்கு எந்த முதலீடு நமக்கு ஏற்றது என்று பார்த்தால் என்றும் விலை ஏற்றம் காணும், நிலத்தில் வைக்கும் முதலீடே மிகச் சிறந்ததாகின்றது. தங்கத்தில் வைக்கும் முதலீடு உடன் பணமாக மாற்றக் கூடியதாக இருந்தாலும், பாதுகாப்பும் குறைவு, மறுவிற்பனை விலை மதிப்பும் குறைவாகின்றது. மேலும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அவர்களின் உடனடித் தேவையை நிவர்த்திக்க கடனாகக் கேட்கும் நிலையும், கொடுக்கவில்லை என்றால் அவர்களின் கோபத்திற்கும், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் துர்பாக்கிய நிலையும்  உருவாகும். உறவுகளும், நட்புக்களும் கெட ஏதுவாகின்றன.

வங்கி இருப்பு, நிரந்தர வைப்பு இருப்பு கணக்கு, தொடர் சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, காப்பீட்டுத் திட்டங்கள், ஷேர் மார்கெட் போன்றவைகளில் முதலீட்டின் மதிப்பு நாம் எதிர்பார்க்கும் இலக்கினை அடைவது நீண்ட நாட்களாகின்றன.

இருப்பினும் கல்வி, தொழில், போக்குவரத்து, கட்டுமானம், துறைமுகம், மின்நிலையங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்களை விரைவில் அடையப் பெற்று அரசு நிர்ணய விலை உயரக் கூடிய நிலங்களில் செய்யும் முதலீடு, குறுகிய காலத்தில் முகமதிப்பு பன்மடங்காகpப் பெருகுகின்றது. ஆயினும், நிலத்தின் அனைத்து ஆவணங்களையும் சட்ட ஆலோசகர் சான்றிதழ் மற்றும் வருவாய்த் துறையின் சான்றிதழ், மற்றும் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னரே முதலீடு செய்தல் வேண்டும். முதலீடு செய்தவுடன் அனைத்து ஆவணங்களையும் நமது பெயருக்கு மாற்றமும் செய்திடல் வேண்டும்.

ஆகவே அனைத்து தொழில்களிலும், பொருட்களிலும் சிறந்தது வீடு, மனை போன்றவைகளே மதிப்புக் குறையாததாகவும், நட்டம் இன்றி லாபம் மட்டுமே தரக்கூடிய முதலீடாகவும், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வாங்கும் பொருளாகவும் அமைகின்றது. ஆகவே இதனைச் சார்ந்த தொழிலே மிகச் சிறந்தது என்பது தெளிவாகின்றது.

மேலும் இந்த தொழிலும், நாம் முதலீடு வைக்காமல் கூட்டாக வியாபாரம் / வணிகம் செய்ய வாய்ப்பு கிடைத்து அதன் லாபத்திலும் பங்கு கிடைத்தால் நலமாயிருக்கும் அல்லவா?  அதிலும் நிரந்தரமாக ஒரு குறிப்பிட்ட சம்பளம் பெறாமல், வருகின்ற லாபத்தில் மட்டுமே பங்குத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள், ஏனைய செலவுகள் அனைத்தும் நிருவாகமே செய்துவிடும் என்று கூறினால் பழம் நழுவி பாலில் விழுந்த கதை போன்றது.


RIGHT DECISION, RIGHT PLATFORM &
RIGHT PERSON: பகுதி-7

அதைவிட மேலும் ஆச்சரியம் தரும் வகையில் ஏனைய நிர்வாக அமைப்பில் உள்ள பிரிவுகளுக்கு இல்லாத சலுகையாக சந்தைப்படுத்தும் பிரிவில் ஐந்து பிரிவுகளைக் கொண்ட கட்டமைப்பினை அமைத்து, வருகின்ற லாபத் தொகையில் ஒவ்வொரு பிரிவிற்கும் இவ்வளவு என்றும், அனைத்துப் பிரிவும் ஒன்றுடன் ஒன்று வலைபின்னல் அமைப்பில் இணைந்து, வருமானத்திற்கு எவ்வித கட்டுப்படும் செய்யாமல், வேண்டும் அளவு விற்பனை செய்யவும், அதற்கு தகுந்தாற்போல் அனைத்து பிரிவும் அதற்குறிய லாபத் தொகையினைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் ஒரு நிர்வாகம் கிடைத்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் நமக்கு!!! கிடைக்க வேண்டுமே !!!

மேலும், இந்த நிறுவனம் நேர்மை, நம்பிக்கை மற்றும் நாணயத்தினையும் தாரக மந்திரமாகக் கொண்டு, அனைத்து அடிமட்ட குடும்பங்களும், தங்களுக்கென்று ஒரு குடியிருப்போ அல்லது வீட்டு மனையோ சொந்தம் கொண்டாடும் வகையில், மிகவும் குறைந்த லாபத்துடன், அனைத்து குடியிருப்பு வசதிகளையும் தன்னகத்தே கொண்ட வண்ணம், மேம்படுத்தப்பட்ட வீட்டுமனைகளை சந்தைப் படுத்த கட்டுக் கோப்பான அமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டு, சமுதாய நலனுக்கும், தங்களுடன் இணைந்து பணியாற்றுபவர் மற்றும் அவர்களின் குடும்ப மேம்பாட்டுக்கும், வளமான வாழ்க்கைக்கும் வழிகாட்டி யாக, தன்னையே சிறந்த எடுத்துக் காட்டாகக் கொண்ட 2014 – ஆம் ஆண்டின் சிறந்த இளம் தொழிலதிபர் என்ற  பட்டத்தினையும், டாக்டர் பட்டத்தினையும் பெற்ற ஒரு சாதனையாளரால் நிருவகிக்கப்பட்டு, நமக்கும் அதனில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதைவிட மிகப்பெரிய பேறு வேறொன்றுமில்லை.

மேலும் இந்த நிறுவனம் வெளியார் உதவிகள் எதுவும் பெறாமலேயே, நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியினைக் கொண்டு “நம் உறவுகள் என்னும் ஒரு சமூகத் தொண்டு அமைப்பினையும் துவங்கி, அனைவரும் பெருமை கொள்ளத் தக்க வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்பதனைக் காணும் பொழுது, அத்தொண்டில் நாமும் ஒரு பகுதியாக உள்ளோம் என்ற மன திருப்தி கொள்ள முடிகின்றது.

நிறுவனத்திற்கு வருகின்ற லாபத்தொகையில் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி, புராடக்ட் பற்றாக்குறை ஏற்படா வண்ணம், திட்டமிட்டு அடுத்தடுத்து மனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புக்கள், பங்களாக்கள், பண்ணை வீடுகள் என்று புராஜெக்ட்களை அறிமுகப் படுத்துகின்றது.

முதலீடு வைப்பவர்களின் முதலீடு மிகக் குறுகிய காலத்தில் பன்மடங்கு பெருக வாய்ப்புள்ள இடங்களிலும், சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களும் தங்களுக் கென்று சொந்தமாக ஒரு வீட்டுமனையைப் பெற்று மகிழும் வகையிலும் அனைத்து அம்சங்களையும் மனதில் கொண்டு, பல்வேறு ப்ராஜெக்ட்களை, 1.5 லட்சம் முதல் 1.5 கோடி வரையிலும், தகுதி வாய்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட, விரைவில் முதலீட்டின் முகமதிப்பு உயரும் இடங்களில் அறிமுகம் செய்கின்றது.

இதனில் உள்ள ஊழியர்கள் மற்றும் இணைந்து பணி புரிபவர்களின் நலனை மனதில் கொண்டு அனைவரும் மிகக் குறுகிய காலத்தில் வளமான வாழ்க்கையுடன் வாழ மற்ற எந்த நிறுவனமும் வழங்கிடாத பங்குத் தொகையினையும் வழங்கி வருகின்றது.

ஸ்ரீ சரபேஸ்வரா லேண்ட் பவுண்டேசன் நிறுவனம் ISO 9001/2008 தரச்சான்றிதழ் பெற்ற, இந்த ரியல் எஸ்டேட் தொழிலில், இந்தியாவிலேயே நம்பர் 1 ஆக வளர்ச்சி பெற்று வருகின்றது. இதனில் நாமும் இணைந்து வாழ்க்கையில் வளம் பெறுவோமே !!! 

வாழ்க்கையில் நாம் எடுக்கின்ற முடிவுகளே வளமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுக்கின்றது. எனவே, உடன் சிந்தித்து தெளிவான முடிவெடுத்து, “RIGHT DECISION IN RIGHT TIME WITH THE  LEAD OF RIGHT PERSON IN RIGHT PLATFORM”   
உடன் செயலாக்கம் செய்தால் வளம் பெறுவது நமது கனவு இலக்கை அடைவது உறுதி !!!!

வளமுடன், நலமுடன், மிக்க மன நிறைவுடன் வாழ வாழ்த்துக்களுடன்,
AND.KRISHNAMOORTHY,
DIRECTOR (Sales), @
SSLF / STAR Team, Chennai – 600 032.
9884689333, 7010394289. 
andkm1950@gmail.com,